வைதேகியிடம் ஒன்பது பெண்களைப் பார்த்ததும், அவர்களைப் பிடிக்க வில்லை என்ற காரணத்தையும் சொல்ல வேண்டும் என்று பல நாட்களாக நினைத்தும் அவனால் சொல்ல முடியவில்லை. இன்று எப்படியாவது சொல்ல வேண்டும் என்று முடிவோடு இருந்தான். வைதேகி, நான் உன்னை பத்தாவது பெண்ணாக பார்த்தது. மேலும் பார்த்த அத்தனைப் பெண்களையும் நான் வேண்டாம் என்று சொன்னேன் என்றும் உனக்கும் தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். அதுக்கு இப்போ என்ன என்றாள். ஒன்னும் இல்லை ஆனாலும் உன்கிட்டே ஒரு விஷயம் [...]